இன்று திருவாரூர் 'ஆழித் தேரோட்டம்'-பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலின் ஆழித்தேர் தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களிலேயே மிகவும் பெரியதாகும். 90 அடி உயரமும் 300 டன் எடையும் உள்ள இந்த ஆழித் தேரோட்டம் இன்று காலை 7.27 மணிக்குத் தொடங்கியது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா தேரோட்டத்தில் கலந்து கொண்டார்.
தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.
“ஆரூரா, தியாகேசா" என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க தேரோட்டம் நடந்தது. இந்தத் தேர் கீழ வீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை நிலையை அடையும்.
ஆழித்தேரை தொடர்ந்து அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர்கள் சென்றன. ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று ஊள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையொட்டி மிக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications