உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ரியாத் தமிழ்ச் சங்க காப்பாளர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

மாசிலாமணி, சவூதி அரேபியா தமிழர்களின் பிரதிநிதியாக செல்கிறார் என்று ரியாத் தமிழ்ச் சங்க தலைவர், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முனைவர் மாசிலாமணி கவியரங்கம் ஒன்றில் எழுதிய கவிதை...
ஒற்றைப் பனை
வெய்யிலிலும் குளிரிலும் புயலிலும்
வெம்பிய மனதோடு தட்டிக் கொட்டிச்
செய்த படகு. ஒட்டகம்.
உயிரோடுதான் உள்ளேன் என்று
எப்போதாவது தலைவாரிக் காட்டும்
ஈச்ச மரங்கள்
அழித்து அழித்து எழுதி எழுதி
குறுமணலில் ஆனா போட
அல்லாடும் காற்று
ஆயிரம் ஆண்டுகளான யூனிஃபார்ம்
வெள்ளை யெனில் ஆண்
கருப் பெனில் பெண்
வழிதவறி வந்த மேகத்தை
கசக்கிப் பிழிந்து
பச்சை குத்திக் கொள்ளும் பாலை
இந்த நாட்டில்
எப்படியோ ஒரு மகாஞானி பிறந்து விட்டார்
இவர் ஒரு ஒற்றைப் பனை
கண்ணுக் கெட்டியவரை
முன்னும் ஒன்றில்லை
பின்னும் ஒன்றில்லை!












Click it and Unblock the Notifications