துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க சமையல் போட்டி
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தலைமை தாங்கினார். துவக்கமாக அருண் ஆனந்த் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.
செயலாளர் காயத்ரி சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். குரல் சொல்லும் நேரத்தில் அஞ்சனா கிருஷ்ணன்,
ஸ்ரேயா ஹரி, ஸ்மேரா ஹரி திருக்குறளைச் சொல்லி அதன் விளக்கவுரையையும் சொன்னார்கள்.
எமனுக்கு எமன் என்ற குறுநாடகம் நடத்தப்பட்டது. இந்நாடகத்தில் ஈஸ்வர், ஜாபர் அலி, கிருஷ்ணன், ராம், சீனிவாசராவ், விஸ்வநாத், ஆசிஷ் மலர்வண்ணன், ரிஷாப் ராம்நாத், சஞ்சித் ராம்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
ஹவாய் நடனத்தில் அஞ்சனா கிருஷ்ணன், அதித் பத்மநாதன், அபர்னா பஞ்சாபகேஷன், அனிருத் முரளி, ஹரினி முரளி, நந்தகுமார் அசோக், ஸ்ரேயா ஹரி, ஸ்ரீஜனனி விஸ்வநாத், ஸ்ருதி சந்திரசேகர், ஸ்மேரா ஹரி ஆகியோர் பங்கேற்றனர். இந்நடனத்தை சாரதா ஹரி மற்றும் ஸ்ரீரங்க நாச்சியார் அசோக் ஆகியோர் வடிவமைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மீரா ஸ்ரீகாந்த் அவர்களால் "தொட்டுப்பார்க்கிறேன்" எனும் நிகழ்ச்சி தந்தை மற்றும் பிள்ளைகளைக் கொண்டு நடத்தப்பட்டது.
சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பிரபல சமையல்கலை நிபுணர் ராகேஷ் பூரி வழங்கினார். ஜூஸ், ஸ்டார்டர், சலாட், மெயின் கோர்ஸ், டெசர்ட் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற முதல் இருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுதர்ஷன் பாடல் பாடினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அருமையான மேடை நாடகத்தில் ஆனந்த் சுப்ரமணியன், ஆனந்த் பரதன், ஸ்ரீகாந்த் ராமச்சந்திரன், சுதர்ஷன், ஸ்ரீராம ஸ்ரீனிவாசன், சாய் சதிஷ், தியாகராஜன், முரளிதர் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியில் செயலாளர் காயத்ரி சந்திரசேகர் நன்றி கூறினார்.













Click it and Unblock the Notifications