தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ஆஸ்திரேலியாவில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன.

தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். தற்போது இப்பறவைகள் 2 மாதம் தாமதமாக வந்துள்ளன.

இரண்டடி உயரத்தில், சிவந்த கால்களுடன், பால் போன்ற வெந்நிறத்தில் சுற்றித் திரியும் இந்த பிளமிங்கோ பறவைகளை பலரும் ஆர்வமாக பார்த்து மகிழ்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளை பார்த்து ரசிக்க வனத்துறையின் சார்பாக கோதண்டராமர்கோவில் பகுதியில் பைனாகுலர் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ தவிர, கடல் காவா எனப்படும் கடல்புறாக்களும் வந்து குவிந்துள்ளன. மேலும் உல்லான் குருவி, கடல் நாரை, கடல் கொக்கு போன்ற பறவைகளும் ஏராளமாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+