பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள்-கருணாநிதி வெளியிடுகிறார்!
சென்னை: பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய புத்தக தொகுப்பை முதல்வர் கருணாநிதி வரும் 21ம் தேதி வெளியிட உள்ளார்.
கடந்த 1974ம் ஆண்டில் பெரியார் ஈவெரா சிந்தனைகள் என்ற நூலை அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி வெளியிட்டார்.
தற்போது, 35 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நூலை விரிவாக்கம் செய்து இரண்டாம் பதிப்பை பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை தயாரித்துள்ளது.
மொத்தம் 9,300 பக்கங்கள் கொண்ட இருபது தொகுதிகளாக இந்த புத்தகத் தொகுப்பு உருவாகியுள்ளது. பெரியாரின் அரிய புகைப்படங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், எழுத்துப் பதிவுகள் உட்பட பல அரிய படங்களும் இடம் பெறுகின்றன.
மேலும், 1922ம் ஆண்டு முதல் பத்திரிகைகளில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், பேட்டிகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.
வரும் 21ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நூல் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத் தொகுப்பை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் வே.ஆனைமுத்து இத்தகவலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications