துபாயில் தமிழக பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்டார் சர்வதேசப் பள்ளியின் கல்வி இயக்குநர் கலந்தர் மீரான் ,தொழில் அதிபர் ஜப்பார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலந்தர் அவர்கள் தனது உரையில் கணித பாடத்தில் 98% மதிப்பெண் பெற்ற மாணவர்களை 100க்கு 100 மதிப்பெண் பெற வைப்பதும்,எல்லா மாணவர்களையும் குறைந்த பட்சம் தேர்ச்சி பெற வைப்பதும் கணிதஆசிரியரின் முக்கிய பணியாகும். இப்பணியை நம்முடைய கணித ஆசிரியர் செவ்வனே செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு அண்ணாருக்கு மாணவர்களின் சார்பாக சிறப்பு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய கணித ஆசிரியர் பிஸ்மி தன்னுடைய உரையில் தற்போதைய காலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக செல்போன் உள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு மற்றும் வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை AMA அன்சாரி, சேட்பரீத், சலீம், OS பாதுஸா மற்றும் ஈட்டி இஸ்மாயில் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.