நாமக்கல் கலெக்டர் சகாயத்திற்கு முதியோர் காவலர் விருது

Subscribe to Oneindia Tamil

Sahyam
நாமக்கல்: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கோடை பண்பலை வானொலி நேயர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அதில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திற்கு முதியோர் காவலர் விருது வழங்கப்பட்டது.

நேயர்கள் கருத்து கணிப்புப்படி இந்த விருது வழங்கப்பட்டது. முதியோர் நலனுக்காக பாடுபடுவதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார் சகாயம்.

விழாவில் பண்பலை சங்கத் தலைவர் வக்கீல் தில்லை குமார், நாமக்கல் மாவட்ட மக்கள் இயக்க அமைப்பாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய அளவில் பெற்றோரை புறக்கணிக்காத மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் பாராட்டிப் பேசினர்.

விழாவில் பண்பலை நேயர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தனது சொத்து விவரத்தை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்தான் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+