பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாபநாசம் கோவில் நகைகள் மாயம்!
பாபநாசம்: பாபநாசம் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானதாக பக்தர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
தென்னகத்தில் புகழ் பெற்ற தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பாபநாசம் பாபநாச சுவாமிகள் திருக்கோவில்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் அகஸ்திய முனிவருக்கு சிவன்-பார்வதி திருமண கோலத்தில் காட்சியளித்த புண்ணியமிக்க பொதிகை மலை அடிவாரத்தில் அமையப்பெற்ற இத்திருக்கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு திருவிழாக்காலங்களில் 10 நாள் திருவிழா மண்டகபடிதாரர்கள் சார்பில் நடத்தப்படும்.
அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகள் அணிவிக்கப்பட்டு சாமி சப்பரவீதி உலா நடக்கும்.
நகைகள் மண்டகப்படிதாரர்கள் முன்பு சரிபார்க்கப்பட்டு கோவில் நி்ர்வாகம் பாதுகாப்பது வழக்கம்.
ஆனால் சமீபகாலமாக கோவில் திருவிழா காலங்களில் சாமி சப்பர வீதி உலா வரும்போது நகைகள் அணிவிக்கப்படாமல் வீதி உலா நடைபெற்று வந்துள்ளது.
இதுகுறித்து மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கேட்டும் இதுவரை முறையான தகவல் இல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாபநாசம் கோவில் நகைகள் மாயமானதா அல்லது காணாமல் போனதா என்று தெரியாமல் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
கோவில் நகைகள் குறித்து நிர்வாகம் தகவல் கூறினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றும் பரபரப்புடன் அப்பகுதியில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications