துபாயில் ரிதம் ஈவன்ட்ஸ் இசை நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட இசைச் திருவிழாவில் பின்னணிப் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா ரவி ஆகியோர் இணைந்து ரிதம் ஈவன்ட்ஸ் என்ற புதிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கினர்.
அந்த ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் 2010ம் ஆண்டுக்கான சிறப்பு இசைநிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. துபாய் இந்தியன் ஹைஸ்கூல் வளாகத்தில் உள்ள ஷேக் ரஷீத் கலையரங்கத்தில் கடந்த 19ம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பின்னணி இசைப் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், கீபோர்டு இசைக் கலைஞர் பிரகாஷ், கலக்கப் போவது யாரு புகழ் சேது, அசத்தப்போவது யாரு புகழ் கிரி ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சியில் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.












Click it and Unblock the Notifications