கிணற்றிலிருநது பழங்கால சிலை மீட்பு
சுரண்டை: சேர்ந்தமரம் அருகே கிணற்றிலிருந்து பழங்கால சிலை ஒன்று மீட்கப்பட்டது.
சுரண்டை அருகே வடநந்தம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் வேலு மகன் பூவையா. இவருக்கு சேர்ந்தமரம்-வீரசிகாமணி ரோட்டின் மேல்புறம் நஞ்சை நிலம் உள்ளது. இதில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாருவதற்காக பூவையா நேற்று அதை பார்க்க சென்றார். அப்போது கிணற்றி்ல் சாமி சிலை ஒன்று கிடப்பது தெரிய வந்தது. உடனே சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை கிணற்றுக்குள் இறக்கி சிலையை மீட்டார். அந்த சிலை 100 ஆண்டுகள் பழமையான 2 அடி உயரமுள்ள கருப்பசாமி சிலை என்பது தெரிய வந்தது. மீட்கப்பட்ட சிலை தற்போது சேர்ந்தமரம் போலீசில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிலை பாளை அருட்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications