ஜூலை 12-ல் கருணாநிதியின் போர்வாளும் பூவிதழும் நாட்டிய நாடக விழா
சென்னை: கருணாநிதியின் படைப்பான போர் வாளும் பூவிதழும் என்ற இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட நாட்டிய நாடக விழா சென்னையில் வரும் 12-ம் தேதி நடக்கிறது.
கருணாநிதி சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாறு படைத்த பெண்களை மையமாக கொண்டு எழுதியது தான் போர் வாளும் பூவிதழும். இதன் கதை நற்கண்ணை, காவற்பெண்டு என்னும் இரண்டு சங்க கால பெண் புலவர்களின் பாடல்களை ஆதாரமாக கொண்டது.
போர்வாளும் பூவிதழும் என பெயரிடப்பட்டுள்ள இந்த நாட்டிய நாடகத்திற்கு கதை, உரையாடல், பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார் முதல்வர். இந்த விழா வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறுகிறது.
இதற்கு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை அளிக்கிறார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம் நடனம் அமைத்துள்ளார்.
இதில் முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications