For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 8வது கோட்டம் நெல்லையில் இன்று உதயம்

By Chakra
Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் 8வது போக்குவரத்து கழக கோட்டம் நெல்லையில் இன்று உதயமாகியது. அதை அமைச்சர் கேஎன் நேரு துவங்கி வைத்தார். இனி தூத்துக்குடி தனி மண்டலமாக மாறும்.

மதுரை கோட்ட கட்டுபாட்டில் செயல்பட்ட நெல்லை, நாகர்கோவில் மண்டலங்கள் இன்று முதல் நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டமாக உதயமாகியுள்ளது.

இதன் துவக்க விழா இன்று காலை நெல்லை சந்திப்பில் நடந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு புதிய கோட்டத்தையும், 42 புதிய வழித்தடங்களில் பஸ்களையும் துவக்கி வைத்தார். இதில் மேயர் சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம், கலெக்டர் ஜெயராமன், அமைச்சர்கள் மைதீன்கான், சுரேஷ்ராஜன், பூங்கோதை, கீதாஜூவன், ராமசுப்பு எம்பி, திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்பிக்கள் ஜெயதுரை, ஹெலன் டேவிட், ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X