Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூரில் நவம்பர் 11ல் சூரசம்ஹார விழா

Subscribe to Oneindia Tamil

Thiruchendur Murugan Temple
திருச்செந்தூர்: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து 6-ம் நாள் முருகப்பெருமான், சூரனை வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் 6-ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூபம், 2.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஜெயந்தி நாதர் யாகசாலை புறப்பாடு, 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விசுவரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 11-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விசுவரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

அன்று மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின்பு சுவாமி, சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு எழுந்தருளுவார். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பக்தர்கள் பயபக்தியுடன் கந்தசஷ்டி விரதம் அனுசரிப்பர். தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+