ஊட்டி மலர் கண்காட்சிக்காக ஹாலந்தில் இருந்து துலிப் மலர்கள் இறக்குமதி

இதையொட்டி பல்வேறு அழகிய மலர்களை நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 1000 துலிப் மலர்கள் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மலர் கண்காட்சிக்காக 200 ரகங்களில் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கண்காட்சிக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்தாண்டு சிறப்பம்சமாக ஹாலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1000 துலிப் மலர்கள் 350 தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு நிறங்களில் துலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளதால் இவை மலர்ந்தால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மலர்கள் 15 நாட்கள் மட்டுமே வாடாமல் இருக்கும் என்பதால் மே மாதம் முழுவதும் டூலிப்ஸ் பூக்கள் மலரும் வகையில் இரு கட்டமாக இம்மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூங்காவில் மிகவும் பழமையான பெரணி இல்லம் 1.5 லட்சம் ரூபாய் செலவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications