For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உவரி சுயம்புலிங்க சாமி கோவில் கடற்கரை சுற்றுலா தலமாகிறது

By Staff
Google Oneindia Tamil News

திசையன்விளை: ரூ.1 கோடியில் உவரி சுயம்புலிங்க சாமி கோவில் கடற்கரை சுற்றுலா தலமாகிறது. இதன் பணிகள் துவக்க விழா நடந்தது.

தென்மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்த பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்கசாமி கோவில். இக்கோயில் அமைந்துள்ள உவரி கடற்கரை பகுதியை அரசு சுற்றுலா தலமாக அறிவுத்துள்ளது.

இதனை மேம்படுத்த ரூ.1 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் உவரி கடற்கரை பகுதியில் சேவார்த்திக்கள் மண்டபம், நடைப்பாதை, கைப்படி, குடில்கள், என பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன.

இப்பணிகள் துவக்க விழா உவரி சுயம்புலிங்க சாமி கோவில் அருகே நடந்தது. ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு தலைமை வகித்தார். விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் துவக்கி வைத்து பேசுகையில்,

'1 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படும் இந்த பணிகள் 6 மாத காலத்துக்குள் முடிவுறும். இந்த கோயிலை திருச்செந்தூர் கோயில் போன்று உருவாக்க வேண்டும்.

உவரி பாரிவேட்டை பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கிடைக்க இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் பேசி முயற்சி செய்கிறேன்.

பணகுடி அருகேயுள்ள குத்ரபாஞ்சான் அருவி சுற்றுலா துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களை தூய்மையாக வைக்க வேண்டும்' என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X