தூத்துக்குடி மீனவர் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவர் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கயது. அது சுமார் 21 கிலோ எடையும், 2 அடி நீளமும் கொண்டதாக இருந்தது.
வால் துடுப்பு பகுதி உருமாறியிருந்த இந்த மீனைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர்.
இது குறித்து மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,
இந்த மீன் அரிய வகை சூரிய மீன் ஆகும். இது அதிகபட்சமாக 4 1/2 அடி நீளமும், 2 ஆயிரத்து 300 கிலோ எடை வரையும் வளரும் தன்மை உடையது. இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும். இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறி காணப்படும்.
இந்த வகை மீன்கள் கனடா, கொலம்பியா, கிழக்கு பசிபிக் கடல், தென்ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் அதிகமாக காணப்படும். தூத்துக்குடி கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதாகும்.
200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடிய இந்த வகை மீன்கள் நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 3.2 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இந்த மீன்கள் ஒரு நேரத்தில் 30 கோடி முட்டைகள் இடும். இந்த மீனை சாப்பிட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications