துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய காந்தி ஜெயந்தி விழா: நவம்பர் 4ல் 10-ம் ஆண்டு விழா

இந்த விழாவின் துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சிரியா மற்றும் விபீஷ் ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விவரித்தனர். காந்தியடிகள் குறித்து சுப்ரஜாவும், பாரதியார் குறித்து வசந்த் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.
பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இளவரசன் அவர்களின் மகள் வந்தவர்களை வரவேற்க நடனம் ஆடினார். சந்திரா குழுவினரின் கூட்டுப் பிரார்த்தனை இடம் பெற்றது.
அதனைத் தொடந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் வடிவமைப்பில் சிறுவர் நடனம், பாடல் நிகழ்ச்சி, வினாடி வினா, புதிய உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இளவரசன், டாக்டர் இளங்கோ உள்ளிட்டவர்களுக்கு பூங்கொத்துகளையும் வழங்கி கௌரவித்தார்.
கமிட்டி உறுப்பினர் விஜயேந்திரனின் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார்.
வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கம் 10-ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. இதனையொட்டி பிரமாண்ட விழா நடத்தப்படவிருக்கிறது. அதில் திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்தார். இதையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்காக உறுப்பினர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications