சென்னையில் தமிழக பெண்கள் செயற்களத்தின் தமிழர் பண்பாட்டு கண்காட்சி

தமிழக பெண்கள் செயற்களம் சார்பில் சென்னை, மைலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ராஜா திருமண மண்டபத்தில் தமிழர் பண்பாட்டு கண்காட்சி கடந்த 1-ம் தேதி நடந்தது. இது சென்னையில் 5-வது ஆண்டாக நடந்த கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தமிழரின் கற்காலம் முதல் தற்காலம் வரை தொன்மையான வரலாற்றை விளக்கும் படங்களும், செய்திகளும் வகைப்படுத்தி வைக்கப்பட்திருந்தது. தமிழ்நாட்டில் மன்னர்களின் ஆட்சிகளும், நிலம், மொழி, பண்பாடுகள் எவ்வாறு மாற்றம் பெற்றது என்னும் அறிய வகை செய்திகளும், தமிழரின் பெருமை சாற்றும் சங்க இலக்கிய நூல்களும், தமிழர் உணவு வகைகள், ஆய கலைகள் அறுபத்து நான்கும், தமிழ் தொண்டு செய்த தியாகிகள் படங்களும் மிக அருமையாக தொகுக்கப்பட்டிருந்தது.
தற்கால நிகழ்வுகளை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்களும் இடம் பெற்றிருருந்தன.












Click it and Unblock the Notifications