சபரிமலையில் குவியும் பக்தர்கள் : தரிசன நேரம் 90 நிமிடம் நீட்டிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையி்ல் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட தரிசன நேரம் நேற்று முதல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் 18 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் பம்பையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர பக்தர் ஒருவர் உயிர் இழந்தார், 20 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு பக்தர்கள் குவிந்து வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே சபரிமலையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது நிலைமையை சமாளிக்க மேலும் 300 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிற்பகல் 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு 4 மணிக்கு திறக்கப்படும்.
பின் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். நெரிசல் அதிகரித்ததால் சமீபத்தில் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டும், இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டும் வந்தது. நேற்று முதல் தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கும், இரவு 12 மணிக்கும் நடை சாத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications