உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளை துவக்க விழா
Subscribe to Oneindia Tamil

விழாவிற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். அடுத்து ஈ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் த.மு.க.அ. அஹமது மீரான் சங்கத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
செந்தில் குமார் அவர்கள் வாழ்வில் நகைச்சுவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், சேவியர் அற்புதராஜ் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு, பேச்சாற்றலின் அவசியத்தைப் பற்றியும் சிறப்புறையாற்றினார்கள்.
முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் செயலாளர் எம். கமலக்கண்ணன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை முகம்மது இத்ரீஸும், நகைச்சுவை நிகழ்ச்சிகளை சங்கத்தின் முக்கியப் பிரமுகர் கே. ஜி. குணா அவர்களும் தொகுத்து வழங்கினர்.
நிகழ்வில் நகைச்சுவை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications