மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் 13ம் தேதி நடக்கவிருக்கிறது.
மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குகிறார். கல்லூரி செயலாளர் அருட் சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் 'தமிழும் இணையமும்' என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவிகளுக்கு காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத்திமா கல்லூரியின் தமிழ்த் துறையினர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications