ஐப்பசி விசு திருவிழா: குற்றால நாதர் கோவிலில் தேரோட்டம்
குற்றாலம்: குற்றாலநாத சாமி கோவிலில் நடந்து கொண்டிருக்கும் ஐப்பசி விசு திருவிழாவின் முக்கிய நிழக்ழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
குற்றாலம் அருள்மிகு திருகுற்றால நாதசாமி திருக்கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்து வருகிறது.
விழாவின் 5ம் நாளான இன்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடந்தது. மொத்தம் 4 தேர்கள் இழுக்கப்பட்டன. முதலில் விநாயகர் தேரும், இரண்டாவதாக முருகன் தேரும், மூன்றாவதாக குற்றாலநாதர் தேரும் இறுதியாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பி்ன் ஒன்றாக இழுக்கப்பட்டன. இதில் செயல் அலுவலர் சுகுமாரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கம்பலவேசம், திருவிளக்கு பூஜை கமிட்டி இலஞ்சி அன்னையாபாண்டியன், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லதா, காங்கிரசைச் சேர்ந்த லட்சுமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.












Click it and Unblock the Notifications