துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி அவர்கள் 'ரமலானுக்குப் பிறகு' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ரமலானில் பெற்ற பயிற்சி மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் மொழிபெயர்ப்பில் உருவான நூல்கள் குறித்த அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
துவக்கமாக இறைவசனங்களை ஓதிய மதரஸா மாணவர்களுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ரொக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகமூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications