குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா-150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவில் கலை அரங்கத்தில் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் பொற்கொடி தலைமை தாங்கினார். தாசில்தார் வீரசாமி, முத்தாரம்மன் கோவில் நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
பக்தர்களின் வசதிக்காக கோவில் பகுதியில் 3 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், நகர் பகுதியில் சுத்தம் செய்யவும் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
விழா காலங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க மின் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தசரா விழாவுக்காக பக்தர்கள் குலசேகரபட்டிணத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நெல்லை, நாகர்கோவிலில் இருந்து அதிக அளவிலான பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
உடன்குடி, நெல்லை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் தனியார் வாகனங்கள் தகுந்த இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி விழா கொடியேற்றம் அன்று 128 போலீசாரும், தசரா விழாவில் 1200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விபத்தை தவிர்க்க திருச்செந்தூர் தீயணைப்பு நிலையம் மூலம் கடலோரம் மற்றும் கலையரங்கம் பகுதியில் மீட்பு பணிகள் குழுவினர் இருப்பார்கள். கூட்டத்தில் விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உதவிக் கலெக்டர் பொற்கொடி கேட்டுக் கொண்டார்.
குலசேகரப்பட்டனம் தசரா விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் உருவம் தரித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications