மண்ணாளச் சென்ற மகள்!
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
என் செல்ல மகளே !
பிறைநிலவாய்
என்னுள்
உதித்தாய்…
சூல் கொண்ட வயிற்றை
நித்தம் நித்தம்
தொட்டுத் தடவி
உள்ளம் பூரித்தேன்…
பத்து பவுர்ணமிகள்
என்னுள் வளர்ந்த நீ
திடீரென
ஒருநாள் இரவில்
உன் இயக்கத்தை
நிறுத்திக் கொண்டாய்…
பூ முகம் காண
காத்திருந்த என் முன்
சலனமற்ற உடலாய்
மடியில்
கிடத்தப்பட்டாய்....
உன்னை நினைக்கும் போதே
மார்பில் ஊறிய பால்
அனைத்தும்
விழலுக்கிறைத்த நீராய்
வீணாய் போனதடி....
என் தாய்மையை
உணர வைத்த
தங்க மகள் நீ...
தரிசாய் இருந்த என்னை
தளிர்க்க வைத்தவிட்டு
மண்ணுக்குள் சென்றுவிட்டாய்...
மனையாள்வாய்
என்றிருந்தேன்
இப்படி மண்ணாளச்
சென்றுவிட்டாயே மகளே!












Click it and Unblock the Notifications