சனிப்பெயர்ச்சி விழா: காரைக்காலில் 2 நாள் அரசு விடுமுறை
காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவான் டிசம்பர் மாதம் 21 ம் தேதி காலை 7.51 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஆபத்சாகயேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவனுக்கு அன்றைய தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் நடைபெறும்.
இந்த விழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்து பரிகாரம் செய்வர். இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ராங்ளின் லால்தீன்குமார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications