அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த 16-ம் தேதி மாலை அபுதாபி செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். அய்மான் மகளிர் கல்லூரியின் செயலாளர் செய்யது ஜாஃபர், அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பத்ரு போரில் கலந்துகொண்ட ஸஹாபாக்களின் வரலாற்றுத் தொகுப்பை நினைவு கூர்ந்து மௌலவி ஹாபிழ் ஹுஸைன் மக்கீ ஆலிம் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் நோபில் ஷாஹுல் ஹமீது, பனியாஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ் ஹமீது மரைக்காயர்,அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ரெஜினால்டு, ஏர் இந்தியா தாமஸ், பாரதி தமிழ் அமைப்பின் தலைவர் கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் பிரதிநிதிகள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் காயல் எஸ். ஏ. சி. ஹமீது நன்றியுரை வாசித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க துணைத்தலைவர் குத்புதீன், செயலாளர்கள் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால், திருவாடுதுறை அன்சாரி, லால்பேட்டை ஏ. எஸ். அப்துல் ரஹ்மான், களமருதூர் ஷர்ஃபுத்தீன், மதுக்கூர் அப்துல்லாஹ், ஏர்வாடி அப்துல் சத்தார், மார்க்கத்துறை செயலாளர். மௌலவி ஷர்ஃபுத்தீன் ஆலிம் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications