24ல் துபாயில் பாலசந்தருக்கு பாராட்டு விழா: யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம், டாடா ஹவுசிங் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

துபாய்: வரும் 24ம் தேதி துபாயில் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தருக்கு பாராட்டு விழா நடக்கிறது.

யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம் மற்றும் டாடா ஹவுசிங் ஆகியவை சேர்ந்து கலை அரங்கம் 2011 என்ற விழாவை வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள துபாய் பெண்கள் கல்லூரியில் நடத்துகின்றன. இந்த விழா இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரை கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது.

மெட்டி ஒலி புகழ் இயக்குனர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில் வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி, விஜய் டிவி, கலைஞர் டிவி புகழ் கோகுல்நாத் மற்றும் அனீஷ் ரஹ்மான் ஆகியோரி்ன் வெரைட்டி நிகழ்ச்சி, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். முதல் தமிழ் 3டி படமான 'அம்புலி 3டி' டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

இந்த விழாவுக்கான அனுமதி இலவசம். டிக்கெட்டுகளுக்கு 050-5865375, 050-5866027, 050-4751352 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+