மலேசிய கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட்டம்: அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்
பெராக்: மலேசியாவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மலேசியாவின் பெராக் பகுதியில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. அங்கு கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது. 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தயை அம்மனாக பாவித்து பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்கு மாரியம்மன், மீனாட்சி, மகாலட்சுமி, மகாகாளி, காமாட்சி, மஹிசாசுரமர்த்தினி உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. விழா நாட்களின் போது கர்நாடக இசைக்கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவின் இறுதி நாளான 6ம் தேதி அம்மன் மஹிசாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு சந்தனம், பாலாபிஷேகம் செய்யப்பட்டது. உக்கிரம் தணிந்த அம்மன் கோவிலுக்கு திரும்பி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பக்தர்களுக்கு மகாபிரசாதம் கொடுக்கப்ட்டது.












Click it and Unblock the Notifications