துபாய் எஃப்.எம்-ல் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்துரையாடல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. கடந்த 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் துபாயில் செயல்பட்டு வரும் 89.5 எஃப். எம். வானொலியில் கடந்த 21ம் தேதி அன்று தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
இகந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், அமைப்புச் செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின், செயற்குழு உறுப்பினர் கடையநல்லூர் ஹபீபுல்லாஹ், விடுதலைச் சிறுத்தைகள் மணி, கோவை வழக்கறிஞர் நந்தகுமார், மார்க்.காம் இணையதள நிர்வாகி அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், அதிமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தங்களது கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி வானொலி நேயர்களை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications