டாக்டர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்: சென்னை வானொலி நிலையம் ஏற்பாடு
டாக்டர் சி.இலக்குவானார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு உரையரங்க நிகழ்ச்சிக்கு, சென்னை வானொலி நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறித்து கூறியிருப்பதாவது, டாக்டர் சி.இலக்குவனார் நூற்றூண்டு உரையரங்கம், சென்னை வானொலி பல்தட ஒலிப்பதிவுக் கூடத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் சென்னை வானொலி நிலைய இயக்குனர் ஜெ.கமலநாதன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
தமிழ் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி தலைமை வகிப்பார். முனைவர் ஒளவை.நடராஜன் வாழ்த்துரை வழங்குவார். இலக்குவணர் இலக்கிய இணையம் குறித்த உரையரங்க நோக்க விளக்கம் நடைபெறும். சென்னை மாநில கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ப.மகாலிங்கம் உரையாளர் அறிமுகம் செய்து வைப்பார். சென்னை வானொலியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் பழ.அதியமான் நன்றியுரை வழங்குவார்.
இதில் தொல்காப்பிய ஆராய்ச்சி குறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் ராமசாமி உரையாற்றுவார். கலை-பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் திருவள்ளுவன், திருக்குறள் ஆராய்ச்சி குறித்து பேசுவார்.
கவிதைத்துறை பங்களிப்பு குறித்து சகித்திய அகாதமி பொதுக் குழு உறுப்பினர் இராம.குருநாதனும், இதழியல் துறைப் பங்களிப்பு குறித்து மா.இராசமாணிக்கனார் இதழியியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த மா.ரா.அரசும் சிறப்புரை வழங்குவர். இந்த உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் அக்டோபர் 18ம் தேதி தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களும் ஒளிப்பரப்பும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications