மறந்து போன சகோதரி!
Subscribe to Oneindia Tamil

நாம் இருவருமாய்
சேர்ந்து நட்ட வேப்பமரம்
நமக்கும் மேலாய்
வளர்ந்து நிற்கிறது….
பொங்கலுக்காக
நீ வரைந்த வர்ணக் கோலம்
இன்னும் அழியாமல்
உன் நினைவூட்டுகிறது….
ஒரு தீபாவளி நாளில்
நான் பரிசளித்த
ஆரஞ்சு நிறப்புடவையை
கட்டிக்கொண்டு
கோவிலுக்கு சென்ற போது
ஊர் கண்ணெல்லாம்
உன் மீதுதான்…
எல்லோரையும் மறந்து விட்டு
மனதுக்கு பிடித்தவனோடு
நீ சென்ற பின்பும்
கொடியில் கிடக்கும்
புடவையுடன் மட்டுமே
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.











Click it and Unblock the Notifications