சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு வைகோ, சீமான் பாராட்டு
மதுரை: 'காவல்கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவி்த்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கவிஞர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்' என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இந்த நாவல் கூடல் நகரான மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்று பின்னணியை கொண்டு, எழுதப்பட்டதாகும்.
இந்த நாவல் மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை அழகிய சொற்கலோடு, வாழ்வியலோடு சித்தரிக்கிறது. வரலாற்றை பின்னணியை சித்தரிக்கும் வித்தியாசமான நாவலாக இது அமைந்துள்ளது.
விருது பெற்ற சு.வெங்கடேசன் (41) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவார். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர் ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989), திசையெல்லாம் சூரியன்(1990), பாசி வெளிச்சத்தில்(1997), ஆதிபுதிர்(1998) ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். மேலும் கலாசாரத்தின் அரசியல்(2001), ஆட்சி தமிழ் ஒரு வரலாற்று பார்வை (2003), கருப்பு கேட்கிறான் கெடா எங்கே? (2004), மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2002), சமயம் கடந்த தமிழ் (2006) ஆகிய ஆய்வு நூல்கள் கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
சிறு வயதில் இந்த உயரிய விருதை பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications