குற்றாலம் ஐந்தருவியில் படகு சவாரி நாளை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாலத்தில் ஐந்தருவி படகு குழாமில் தண்ணீ்ர் நிறைந்ததை அடுத்து நாளை முதல் படகு சவாரி தொடங்குகிறது.

குற்றாலத்தில் ஒரு வாரகாலமாக நல்ல சீசன் உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகள் தவிர பொழுதுபோக்காக படகு குழாம் உள்ளது.

ஐந்தருவி அருகில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாமில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தண்ணீர் நிரம்பியதை அடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.

இதற்காக மொத்தம் 33 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் இரண்டு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் படகுகள் 4க்கும் உள்ளன. இவற்றிக்கு கட்டணமாக 2 இருக்கை படகுகளுக்கு அரை மணி நேரத்திற்கு ரூ.75ம், நான்கு இருக்கை படகுக்கு ரூ.100ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.120ம், தனிநபர் படகுகளுக்கு ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை சுற்றுலா துறை மண்டல மேலாளர் சங்கர் , குற்றாலம் தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் கருப்பசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+