நாளை திருப்பதியில் கருட வாகன சேவை-5 லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர்
திருமலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருடவாகன சேவை திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலைமீது வாசம் செய்யும் வேங்கடவன் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பிரம்மனே வந்து உற்சவவிழா எடுக்கிறார் என்பது ஐதீகம். இதனை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாளுக்கு பத்துநாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான விழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மரபுப்படி பட்டு வஸ்திரம் வழங்கி பிரம்மோற்சவத்தை தொடங்கிவைத்தார். விழாவை ஒட்டி திருமலையில் கோவிலை சுற்றிலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
முதல்நாள் இரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சேஷவாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளிலும் குழுமியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாற்கடலில் ஆதிசேசன் மீது இறைவன் எழுந்தருளியிருப்பார் அல்லவா அதனை அனைவராலும் காணமுடியாது என்பதால் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மலையப்ப சுவாமி சேஷவாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் வலம் வருகிறார் என்பது ஐதீகம். இரண்டாம் நாள் சரஸ்வதியை போல வேடமணிந்து வெண்பட்டுடுத்தி கையில் வீணையுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் காலை சிம்மவாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் சப்பரத்தில் காலிங்கநர்த்தன மாடியவாறு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
கற்பகவிருட்சம்
நான்காம் நாளன்று மலையப்ப சுவாமி கற்பக விருட்சவாகனத்தில் வலம் வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏனென்றால் இறைவன் ஏழுமலைவாசன் கேட்ட வரம் தருபவன் அல்லவா, அந்த இறைவனே கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வருவதை பக்திப்பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
கருடவாகனம்
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் ஒரு வாகனம், நித்தம் ஒரு அலங்காரம் என பத்துநாட்களும் காலை மாலை இருவேளையும் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளிலும் வலம் வருகிறார். இதனைக்கண்குளிர காணவே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமலையில் திரள்கின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications