பாடகி சுதா ரகுநாதனுக்கு அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு

Subscribe to Oneindia Tamil

Sudha Raghunathan
சென்னை: அண்ணாமலை செட்டியாரின் 131வது பிறந்தநாள் விழாவில், பாடகி சுதா ரகுநாதனுக்கு அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் 131வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ விழாவிற்கு தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தர் ராமசாமி வரவேற்றார்.

விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்தையா, செயலர் ஏ.ஆர்.ராமசாமி, முன்னாள் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனுக்கு, அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு மற்றும் 1 லட்சம் ரூபாய் காசோலையை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ வழங்கினார்.

அதன்பின் விழாவில் நீதிபதி துரைசாமி பேசியதாவது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் இசை உலகத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர். தற்போது அவரது குடும்பத்தாரும் அதே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அண்ணாமலையாரின் புகழ், இந்த பல்கலைக் கழகத்தில் இசையாக கலந்திருக்கும். அதை மறைவதில்லை. அங்கு படிக்கும் மாணவ, மாணவர்களின் வாழ்க்கையில் அது உயிரோட்டமாக கலந்திருப்பதை காணலாம், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+