கோவை மலர் கண்காட்சி: ஜனவரி 6ம் தேதி முதல் துவக்கம்
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 6ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவிருக்கிறது.
பள்ளிகளுக்கு மலர் அலங்காரத்துக்கு கட்டணம் கிடையாது. சிறந்த பள்ளிப் பூங்கா (கட்டணம் ரூ.500), கல்லூரிகளுக்கு மலர் அலங்காரம் (கட்டணம் கிடையாது), காய்கறி அலங்காரம் (கட்டணம் கிடையாது), சிறந்த கல்லூரி பூங்கா (ரூ.500), பொது மக்களுக்கான பிரிவில் சிறந்த வீட்டுப்பூங்கா (ரூ.300), அடுக்குமாடி குடியிருப்பு (ரூ.500), வணிக நிறுவன பூங்கா (ரூ.1000), மலர் அலங்காரம் (ரூ.100), சிறந்த அங்காடி (ரூ.100), சிறந்த மலர்க்கோலம் (ரூ.100) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications