துபாய் ரமலான் மஜ்லிஸில் தமிழக மார்க்க அறிஞர் உரை
Subscribe to Oneindia Tamil

துபாய் அல் மனார் சென்டரில் புனித ரமலானையொட்டி ரமலான் மஜ்லிஸ் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி நடந்த மஜ்லிஸில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சென்னை தாருல் ஹுதா நிறுவனர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிம் அவர்கள் 'வெற்றி உங்களுடையதே" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அவர் உரையினைத் தொடர்ந்து கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை ஆதரவுடன், அல் மனார் சென்டர், நஜ்முதீன் மற்றும் ஜாபர் அலி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தினர்.












Click it and Unblock the Notifications