23ல் துபாயில் தமிழ் பெண்கள் சங்கம் நடத்தும் "வானவில்" நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ் பெண்கள் சங்கம் நடத்தும் வானவில் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்தியா கிளப் தர்பார் ஹாலில் நடக்கவிருக்கிறது. இந்த தகவலை சங்கத் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தெரிவித்தார்.
துபாய் தமிழ் பெண்கள் சங்கம் கடந்த 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நலச் சங்கத்தில் பதிவு பெற்றுள்ளது.
நவராத்திரியையொட்டி கொலு வைத்தல், ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050-6592509 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications