மின்னஞ்சலில் ஈழத்து சிற்றிதழ்கள்
ஈழத்தில் வெளிவரும் தமிழ் சிறு சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம் உள்ளிட்ட சிற்றிதழ்களை நேரடியாக வாங்கி படிக்க முடியாதவர்களுக்கு மின்னஞ்சலில் அதனை அனுப்பிவைக்கின்றனர். ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் உள்ள தமிழர்களின் எழுத்துக்களை படிக்க ஆர்வமுள்ள வாசகர்களுக்காக அங்குள்ள சிற்றிதழ்களை மேமன் கவி என்பவர் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கின்றார்.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் இதழும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் http://www.noolaham.org/ தொடுப்பிலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளை பார்வையிடலாம்.
சமூக வலைத்தளத்தில் சஞ்சிகை
பேஸ்புக்கில் ஈழத்திலிருந்து தமிழில் வெளிவரும் சிறுசஞ்சிகைகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. http://www.facebook.com/groups/SLTLM/ என்ற முகவரியில் பார்வையிடலாம்.