விடை கொடுத்த காதலன்...
Subscribe to Oneindia Tamil

என் அன்பிற்குரியவனே !
நினைத்துப் பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்களை…
பேருந்து பயணத்தில்
படிக்கட்டில் நின்ற போது
உன் நோட்டுப் புத்தகத்தை
என் கைகளில் கொடுத்தாய்…
கோவிலில் ஒருநாள்
சந்தித்த பொழுது…
உன் கைகளில் இருந்த
பூக்களைக் கொடுத்தாய்…..
திடீர் மழையில்
நனைந்து நிற்கையில்….
நான் நனையாமல் இருக்க
குடையை பிடித்தாய்…
இருவரும் ஒருநாள்
பேசிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராமல் நீ
முத்தம் கொடுத்தாய்…
எதுவும் சொல்லாமல்
தடுமாறி நிற்கையில்
காதலைச் சொல்லி
அதிர்ச்சி அளித்தாய்…..
வீட்டுச் சூழல் சொல்லி
நான் விலகி நிற்கையில்
நீ கண்ணியமாய் கை குலுக்கி
விடை கொடுத்தாய்.












Click it and Unblock the Notifications