குமரி சங்கமம் 2011-கட்டுமரப் படகு போட்டியைத் தொடங்கி வைத்த கனிமொழி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று நடந்த கட்டுமரம் செலுத்தும் போட்டியில் நீரோடையைச் சேர்ந்த மீனவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
குமரி சங்கமம் 2011 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கன்னியாகு்மரியில் கட்டுமரம் செலுத்தும் போட்டி நேற்று காலை கன்னியாகுமரி கடலில் நடந்தது. போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்எல்ஏ ராஜன், எம்பி ஹெலன் டேவிட்சன், தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் மொத்தம் 18 கட்டுமரப் படகுகள் கலந்து கொண்டன.
சுமார் ஒரு கடல் மைல் தொலைவு தூரம் நடந்த இப்போட்டியில் நீரோடையைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவரது தலைமையிலான வல்லம் முதல் பரிசையும், குறுப்பனையைச் சேர்ந்த மரியஜான் என்பவரது தலைமையிலான வல்லம் இரண்டாம் பரிசையும், மேலமணக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரது வல்லம் மூன்றாவது பரிசையும் பெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கன்னியாகுமரி பங்கு தந்தை லியோன்கென்சன் தலைமை வகித்தார். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், கலந்து கொண்ட அனைத்து கட்டு மரத்துக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டது. பரிசுகளை தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications