குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குலசேகரபட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
உடன்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நேற்று (17-ம் தேதி) கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 8 மணிக்க ஆச்சார்ய விசேஷ சந்தி, பாவனா அபிஷேகத்திற்கு பின் 6ம் கால வேள்வி கூட பூஜை வேள்வி நடந்த பின்னர் கும்ப சக்தி உருவேற்றப்பட்டு தொடர்ந்து அருட்பேராற்றலை கும்பத்தில் இருந்து பிம்பத்திற்கு அழைத்து வரப்பட்டது. அங்கு நாமகரணம், நிறைஅவி அளித்தல் வழிபாடு, சொரி பூஜை தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து செண்டை மேளம் முழுங்க முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. 11 மணிக்கு புனித நீர் நிரப்பட்ட கும்பங்கள் மூலஸ்தான விமானம், சாலை கோபுர விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 11.35 மணிக்கு மூலஸ்தான விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சாலை கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு முத்தாரம்மன், ஞானமூர்த்திஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications