கோவை ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரியில் மொழிப்பயிற்றுவித்தல் புத்தொளிப் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
மைசூர்: இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனமும் கோவை ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மொழிபயிற்றுவித்தல் புத்தொளிப்பயிற்சி இரண்டுநாள் நிகழ்வு இன்று(30.03.2011) காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை முனைவர் இரா.சானகி அவர்கள் வரவேற்றார். கோவை மாவட்டக் கல்வித்துறை அதிகாரி திருவாட்டி கலைவாணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மொழிபயிற்றுவித்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மேனாள் தேர்வுநெறியாளர் முனைவர் நடராச பிள்ளை அவர்கள் முதன்மையுரையாற்றினார். கல்வியாளர் முனைவர் இரத்தினசபாபதி, முனைவர் தூ.சேதுபாண்டியன், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications