இந்தியாவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்கள்: இலங்கை பிரதமர் ஜெயரத்னே
கொழும்பு: விடுதலை புலிகள் இன்னும் கூட இந்தியாவில் பயிற்சி முகாம்கள் நடத்தி வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் டிஎம் ஜெயரத்னே தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
முன்னாள் இலங்கை போராளி வினாயகம் தலைமையில் இந்தியாவில் முகாம்கள் நடக்கின்றன. இதற்கு ஆஸ்லோவைச் சேர்ந்த நெடியவன் உறுதுணையாக இருக்கிறார்.
இந்தியாவில் பயிற்சி பெறும் விடுதலைப் புலிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாக புலனாய்வு அறிக்கை கூறுவதாக இந்திய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அது பற்றி விவாதிக்கும்போது தான் ஜெயரத்னே இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், புலிகள் அமைப்பை வீழ்த்தி விட்டோம் என்று இலங்கை கூறி விட்ட போதிலும், அவ்வப்போது இதுபோல இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன என்று இலங்கை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications