களிமண் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள்- செங்கோட்டையில் விறுவிறு தயாரிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரமாண்ட பிள்ளையார் சிலைகளுக்கு பூஜை நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டையும் போல் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்திக்காக செங்கோட்டையில் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு உருவாக்கப்படும் சிலைகள் நெல்லை மாவட்டத்தில் பல பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுதோடு கேரளாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை உள்ள வி்லைகளில் இங்கு விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 1 அடி முதல் 10 அடி வரை களிமண்ணால் உருவாக்கப்பட்டு, வர்ணம் பூசப்படும் இந்த சிலைகளுக்கு எல்லா ஊர்களிலும் நல்ல கிராக்கி உள்ளது.
சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு களிமண்ணால் உருவாக்கப்படும் இந்த களிமண் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்போது தண்ணீரையும் மாசுப்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியை அடுத்து, செங்கோட்டையில் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த 1 மாதமாக, களிமண் சிலை உருவாக்கில் ஈடுபட்டு வந்தனர். இத்தொழிலில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயபக்தியுடன ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications