முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறப்பு

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கடந்த வாரங்களில் முதுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை இன்று முதல் மீண்டும் திறந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடம் முதுமலை புலிகள் காப்பகமாகும். இங்கு யானைகள், மான்கள், புலிகள், காட் டெருமைகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள், பறவைகள் உள்ளது.

தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்குள்ள வன விலங்குகளை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் மழையில்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. அங்குள்ள செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தாதலும், நீர்நிலைகள் வறண்டு போனதாலும் இங்குள்ள வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன.

மேலும் இந்த பகுதியில் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தை கடந்த மாதம் முதல் தேதியில் இருந்து சென்னை தலைமை வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

தொடர்ந்து கடந்த வாரங்களில் முதுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை இன்று முதல் மீண்டும் திறந்தனர்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வரும் 3 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 6 நாட்கள் அனைத்து வன விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற வற்றின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதால், முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் வரும் 3 ம் தேதி முதல் மூடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+