நாளை சென்னையில் ஔவை நடராசனுக்கு பவளவிழா பாராட்டு
சென்னை: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் தலைவர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள எசிபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் பவளவிழாப் பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணை தலைவர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமை வகிக்கின்றார். இராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் அருட்செல்வர் டாக்டா. நா. மகாலிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலர் திரு. தேவசோதி சகராசன் இ.ஆ.ப., அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். திருமதி.த.சானகி, தமிழ்மொழி அகாடெமி மற்றும் பாரதியார் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இரா.காந்தி, இலக்கியவீதி இனியவன் மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலைந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications