தேர்தலில் யாருக்கு ஆதரவு-பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு
நெல்லை: முஸ்லீம்களை மேம்படுத்துவது குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவித்தது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் அறிக்கையில், மதுரையில் மாநில தலைவர் இஸ்மாயில் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு அளித்து உயர்கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் அளிப்பது, வக்பு வாரிய சொத்துகளை பராமரிப்பது, அரசியல் அதிகாரத்தில் முஸ்லீம்களுக்கு உரிய வாய்ப்பு அளிப்பது, முஸ்லீம் மக்களை மேம்படுத்துவது, குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
எஸ்டிபிஐக்கு முழு ஆதரவு தெரிவித்து போட்டியிடும் இடங்களில் இணைந்து களப்பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications