துபாயில் நடந்த பிரசித்தம் குழுவின் கலை நிகழ்ச்சி
துபாய்: துபாய் குளோபல் வில்லேஜின் இந்திய அரங்கில் பிரசித்தம் குழுவினரின் கலைநிகழ்ச்சி கடந்த 23ம் தேதி நடைபெற்றது.
பிரசித்தம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை அரங்கிற்கு வந்த பல்வெறு நாடுகளின் பார்வையாளர்கள் பாராட்டினர். சிங்கப்பூர் தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணசாமி அமீரகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் கலைத்திறனைப் பாராட்டினார். துபாய் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் கலாச்சார பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துணைத்தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொருளாளர் கீதாகிருஷ்ணன், செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் பிரசன்னா, பாலா, விஜயேந்திரன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வருடந்தோறும் நடக்கும் பிரசித்தம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருவதாக இந்திய அரங்கின் நிர்வாகக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்திவரும் நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவிற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications